சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு ஆதரவு

1 Min Read

பெய்ஜிங், அக். 25- சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013ஆம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023ஆம் ஆண்​டில் அவர் 3ஆவது முறை அதிப​ராக தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார்.

அவரது தலை​மைக்கு எதி​ராக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், மூத்த ராணுவ தளப​தி​கள் போர்க்​கொடி உயர்த்தி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக ஏராள​மான தலை​வர்​கள் காணாமல் போன இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. குறிப்​பாக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 3ஆவது மிகப்​பெரிய தலை​வ​ரான ஹீ வெய்​டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காண​வில்​லை.

சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய கமிட்​டி, அந்த நாட்​டின் உயர்​நிலைக் குழு​வாக கருதப்​படு​கிறது. இந்த கமிட்டி ஆண்​டு​தோறும் அக்​டோபர் மாதம் பெய்​ஜிங்​கில் கூடி ஆலோ​சிப்​பது வழக்​கம். இதன்​படி கடந்த 20ஆம் தேதி அதிபர் ஜி ஜின்​பிங் தலை​மை​யில் மத்​திய கமிட்​டி​யின் கூட்​டம் பெய்​ஜிங்​கில் தொடங்​கியது. இதில் 350 உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். 3 நாட்​கள் நடை​பெற்ற கூட்​டம் 23.10.2025 அன்று நிறைவுப் பெற்​றது.

இதன் ​பிறகு மத்​திய கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீன கம்​யூனிஸ்ட் கட்​சி, ஆட்சி நிர்​வாகம் மற்​றும் ராணுவத்​தில் முக்​கிய பதவி​களில் இருந்த 9 பேர் பணி நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ளனர். குறிப்​பாக ஹீ வெய்​டோங்​கின் பதவி நீக்​கத்​துக்கு மத்​திய கமிட்டி கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. அவருக்கு பதிலாக ராணுவத்​தின் ஊழல் தடுப்பு துறை தலை​வ​ராக ஜாங் ஷெங்​மின் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். அவர் மத்​திய ராணுவ கமிஷனின் துணைத் தலை​வ​ராக​வும் பதவி வகிப்​பார்.

மத்​திய கமிட்டி கூட்​டத்​தில் அதிபர் ஜி ஜின்​பிங்​கின் தலை​மைக்கு ஆதர​வாக ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அடுத்த 5 ஆண்​டுக்​கான திட்​டத்​துக்​கும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இதன்​மூலம் சுய​சார்பு சீனா திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்​டுள்​ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *