வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர்!

1 Min Read

சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பொருளாதார நிபுணர் சீதாராமன்! 

அரசியல், இந்தியா, தமிழ்நாடு

சென்னை, மே 18   அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர் ஏற்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது. 

அது குறித்த செய்தி வருமாறு:  

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டுக்குப் பேரிடர் என பொருளாதார வல்லுநரும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கண வருமான பரகலா பிரபாகர் விமர்சித் துள்ளார். 

அவர் எழுதிய “The Crooked Timber of New India – Essays on a Republic in Crisis” – என்ற புத்தகம் பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் என்ற பெயரால் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு அதனை கைவிட்டு, ஹிந்துத்துவா ஆதிக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இவ்வாறு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *