சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு

சென்னை, அக்.24 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.  எனினும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங் களில் கனமழை தொடரும் வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல மாவட் டங்களில் நேற்று (24.10.2025) கனமழை கொட்டி தீர்த்தது. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் முழுவதும் பரவலாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேகமாக அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி பல்வேறு அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

அதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது, இன்று வட தமிழகம், புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு – வட மேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில்  புயல் அபாயம் நீங்கியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *