பாட்னா, அக்.23 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங் கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும். ‘இந்தியா’ கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப் படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி அய்ந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும். இவ்வாறு அசோக் கெலாட் தெரி வித்துள்ளார்.
பீகார் தேர்தல்: நட்பு ரீதியான போட்டியை முரண்பாடாகப் பார்க்கக் கூடாது லாலு, தேஜஸ்வியைச் சந்தித்த பின் அசோக் கெலாட் பேட்டி
Leave a Comment
