மழை வெள்ளத்தைச் சமாளிக்க சென்னையில் ஏற்பாடு பன்னிரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் பேரிடர் மீட்புப் படை

சென்னை,அக்.22 சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி   மழை பெய்தது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், சென்னை நகர காவல்துறையினரையும் உஷார்படுத்தி காவல் ஆணையர் அருண் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னையில் 12 ஆணையர்கள் தலைமையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இந்த பேரிடர் மீட்பு படைகளில் இடம்பெற்றுள்ளனர்.  இதுதவிர சென்னை நகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்சென்னையில் மட்டும் 23 சிறப்பு மினி போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி எண் 100-இல் பேசி உதவி கேட்டால் உடனடியாக மீட்பு படையினர் சென்று உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும் தென்சென்னை கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

மொத்தத்தில் மழை வெள்ளத்தை சமாளிக்க சென்னை காவல்துறையினர் தயார்நிலையில் இருப்பதாக காவல்துறை ஆணையர் அலுவலக வட்டார உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *