நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் எச்சரிக்கும் மருத்துவர்கள்!

புதுடில்லி, அக். 22- இந்தியாவில், இனிப்பு வகைகளின் நுகர்வு கவலைக்குரிய வகையில் அதிகரித்திருப்பதாகவும், இதனால், நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர்.

அண்மையில் நடத்தப் பட்ட ஓர் ஆய்வின்படி, நகரங்களில் இனிப்பு வகை கள் சாப்பிடும் பழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில், மாதத்துக்கு 3 முறை அல்லது அதற்குமேல் இனிப்புகளைச் சாப்பி டும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித் துள்ளது. நகர்ப்புறங்களில் பத்தில் 7 குடும்பங்கள், பாரம்பரிய இனிப்பு வகைகளுடன் சேர்த்து, சாக்லேட், பிஸ்கட், கேக் போன்றவற்றையும் சாப்பிடுகின்றனர். 43% பேர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரும், இனிப்பு உணவு வகைகளைச் சாப்பிடு வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக தெரி வித்துள்ளனர். 70% பேர், குறைந்த சர்க்கரையுள்ள மாற்று உணவுகள் கிடைத்தால், அதைத் தேர்ந்தெடுப்பதாக கூறியுள்ளனர். 5% பேர் தினமும் சர்க்கரை உண் கின்றனர். 26% பேர் மாதத்திற்கு 15இல் இருந்து 30 முறை சர்க்கரை உண் கின்றனர்.

74% நகர்ப்புற குடும்பங்கள், ஒரு மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் பாரம்பரிய இனிப்புகளை உண்கிறார்கள். அய்சிஎம்ஆர் மற்றும் எம்டிஆர்எப் இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.6கோடி பேர் நீரிழிவு ஏற்படும்அறிகுறிகளுடன் உள்ளனர். 31.5 கோடிபேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலில், தீபாவளி போன்ற நாள்களில் சர்க்கரை நுகர்வு அதிகரித்திருப்பதாகவும், இதனால் நீரிழிவுடன் வாழ்பவர்களுக்கு ரத்தத் தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ள தென மருத்துவர்கள் எச் சரிக்கின்றனர். இதுபோன்ற இனிப்புகளைப் பரிமாறு வதும் சாப்பிடுவதும் வழக்கம் என்றாலும், இனிப்பு வகைகளை நுகரும் அளவை குறைத் துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக் கின்றனர். மக்கள் சிலர், சர்க்கரை உணவுகளுக்குப் பதிலாக, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற உப்பில்லா உலர் பழங்களுக்கு மாறி யிருப்பது நல்ல அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *