ஹாங்காங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: 2 ஊழியர்கள் பலி

1 Min Read

ஹாங்காங், அக். 22- ஹாங்காங் நாட்டில் சரக்கு விமானம் கடலில் விழுந்த விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

துருக்கியை தளமாக கொண்ட ஏசிடி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 747 ரக சரக்கு விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 3.50 மணிக்கு துபாயில் இருந்து ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றது.

அந்த விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமான ஊழியர்கள் இரண்டு பேர் பலியாகினர். காயமடைந்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், “விபத்துக்குள்ளான போயிங் 747 ரக சரக்கு விமானம் 32 ஆண்டுகள் பழமையானது. இது முதலில் பயணிகள் ஜெட் விமானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *