என்று முடியும் இந்த மூட பக்தி? கோவிலுக்குச் சென்ற 18 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர்

1 Min Read

வாணியம்பாடி, அக்.22- வாணியம்பாடி அருகே காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற 18 பேர் பாலாற்று வெள்ளத்தில் சிக்கித்  தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 18 பேர் நேற்று முன்தினம் (20.10.2025) தீபாவளி அன்று தகரகுப்பம் அருகேஜோதி நகர் பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்குள்ள பாலாற்றைக் கடந்து சென்ற போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றுள்ளது. மீண்டும் திரும்பி வரும் போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றைக் கடக்க முடியாமல் 18 பேரும் சிக்கி தவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள், பொது மக்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி 18 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்

அதேபோன்று வாணியம்பாடி அருகே தமிழ்நாடு -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (20.10.2025) தீபாவளியை யொட்டி அங்குள்ள கனக நாச்சியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்ற போது நீர்வரத்து குறைவாக இருந்தது.

கோவிலில் வழிபாடு முடிந்து திரும்பி வந்தபோது, தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறியதால், தடுப்பணையை கடக்க முடியாமல் தவித்த 10-க்கும் மேற்பட்டோரை அங்கிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி மீட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *