பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்! தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

அய்தராபாத்: அக்.20-  பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்வான குரூப் 2 பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் பேசிய முதலமைச்சர் ரேவந்த்  “அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், அவர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையில் பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் அரசு ஊழியர்களைப் போலவே அவர்களின் பெற்றோரும் மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்” என்றார்.இந்த புதிய சட்டத்திற்கான மசோதாவைத் தயார் செய்ய ஒரு குழுவைத் தேர்வு செய்யுமாறு தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவை முதல்வர் ரேவந்த்  கேட்டுக் கொண்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *