நீர் வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

மேட்டூர், அக்.20 மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து  அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கருநாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது.

இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் (18.10.2025) விநாடிக்கு 9,026 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று (19.10.2025) காலை 10,374 கனஅடி​யாக அதி​கரித்​தது.

இதனிடையே, கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், டெல்டா மாவட்​டங்​களில் பாசனத்​துக்​கான நீர் தேவை குறைந்​தது. எனவே, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் மட்​டுமே திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

தண்​ணீர் திறப்​பை​விட நீர்​வரத்து அதி​க​மாக உள்​ள​தால் மேட்​டூர் அணை நீர்​மட்​டம் வேக​மாக உயர்ந்து வரு​கிறது. அணை நீர்​மட்​டம் 118.55 அடி​யில் இருந்து 119 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.17 டிஎம்​சி​யில் இருந்து 91.88 டிஎம்​சி​யாக​வும் உயர்ந்​துள்​ளது. நடப்​பாண்​டில் 7ஆவது முறை​யாக மேட்​டூர் அணை நிரம்ப வாய்ப்​புள்​ள​தால், நீர்​வளத் துறை அதி​காரி​கள், அணை​யின் 16 கண் மதகு பகு​தி​யில் உள்ள வெள்​ளக் கட்​டுப்​பாட்டு மய்யத்​தில் 24 மணி நேர​மும் நீரின் அளவைக் கண்​காணித்து வரு​கின்​றனர்.

 

தரமற்ற உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு

சென்னை, அக்.20  தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழ்நாடு உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி உள்​ளிட்ட   காலங்களில் இனிப்​பு, கார வகைகளை தயாரித்து விற்​பனை செய்​யும் விற்​பனை​யாளர்​கள் உணவு பாது​காப்​புத் துறை​யில் பதிவு செய்​திருக்க வேண்​டும். அப்​படி பதிவு செய்​யாமல் விற்​பனை செய்​வது சட்​டப்​படி குற்​ற​மாகும்.

விதி​களை மீறி​னால் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்​த​மாக​வும், சுகா​தா​ர​மாக​வும், கலப்​படம் இல்​லாமலும் உணவுப் பொருட்​களை தயாரிக்க வேண்​டும். தின்​பண்​டத்​தின் பெயர், உற்பத்தி தேதி, காலா​வதி தேதி உள்​ளிட்​டவை குறிப்​பிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

வாடிக்​கை​யாளர்​கள் தரமில்​லாத உணவுப் பொருட்கள் விற்​கப்​படு​வதை அறிந்​தால், 9444042322 என்ற வாட்​ஸ்-​அப் எண்​ணில் புகார் அளிக்​கலாம் என்​று​ தமிழக உணவு பாது​காப்​புத் ​துறை தெரி​வித்​துள்​ளது.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்
அருகில் செல்ல வேண்டாம்

பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை, அக்.20 அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைப்பிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது.

மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள், பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வதைத் தவிர்க்க வேண்​டும்.

சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்​கள் மற்​றும் மின்​சாதனங்​களுக்​கருகே தேங்​கிக்​கிடக்​கும் தண்​ணீரில் நடப்​பதோ, ஓடு​வதோ, விளை​யாடு​வதோ மற்​றும் வாக​னத்​தில் செல்வதோ தவிர்க்​கப்பட வேண்​டும். மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்​தடை குறித்த புகார்​களுக்கு உடனடி​யாக மின்​னகத்தை “94987 94987” தொடர்பு கொள்​ளு​மாறு பொது​மக்​கள் கேட்​டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *