அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலைத் தகவல் துல்லியமாகக் கிடைக்கிறது இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

1 Min Read

திருநெல்வேலி, அக்.19- அ​திக செயற்​கைகோள்​களை அனுப்பி உள்​ள​தால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது என்று இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் நாராயணன் கூறி​னார்.

திருநெல்​வேலி மாவட்​டம் வடக்​கன்​குளத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய வானிலை ஆராய்ச்​சிக்கு அதிக அளவி​லான செயற்​கைகோள்​களை அனுப்பி இருக்​கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது. மீனவர்​கள் கடலில் எல்​லையை கடக்​காமல் இருக்​க​வும், மீன்​கள் அதி​க​மாக உள்ள பகு​தி​களை அறிய​வும், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இணைய செயலிகளை உரு​வாக்கி கொடுத்​துள்​ளோம். அதன் மூல​மாக தமிழிலேயே தகவல்​களைப் பெற முடி​யும்.

ககன்​யான் திட்​டத்​துக்​காக 80 ஆயிரம் சோதனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இத்​திட்​டத்​தில் முதலில் 3 ஆளில்லா ராக்​கெட்​களை விண்​ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்​பே, ஆட்​களை விண்​ணுக்கு அனுப்​புவோம். அதற்​கான முதல் ராக்​கெட் இந்த ஆண்டு இறு​தி​யில் விண்​ணுக்கு செலுத்​தப்​படும். அடுத்த ஆண்டு 2 ராக்​கெட்​டு​கள் ஏவப்​படும். விண்​வெளி​யில் இருக்​கும் நபர்​களுக்கு ஏதாவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அதிலிருந்து தப்​பிக்க ‘க்ரூ எஸ்​கேப் சிஸ்​டம்’ என்ற பாது​காப்பு அமைப்பை வெற்​றிகர​மாக சோதித்​துள்​ளோம்.

உலக அளவில் விண்​வெளிக்கு ராக்​கெட்​களை வணி​கப் பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​து​வ​தில் இந்​தியா 2 சதவீத பங்​களிப்பை கொண்​டுள்​ளது. இதை 10 சதவீத​மாக உயர்த்​தும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம். தற்​போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கை கோள்​களை எடுத்து செல்​லும் ராக்​கெட்​களை வெற்​றிகர​மாக அனுப்பி உள்​ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்​கைக்​கோளை அனுப்​புவதற்கு தேவை​யான ராக்​கெட்​டு​களை தயாரிக்க அனு​மதி கிடைத்​துள்​ளது. அந்​தப் பணி​யும் நடை​பெறுகிறது.ககன்​யான் திட்​டத்​துக்​கு, 80 ஆயிரம் கிலோ செயற்கை கொளை சுமந்து செல்​லும் ராக்​கெட் தயாரிக்க வேண்​டும். அதற்​கான முயற்​சிகளும் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு நாராயணன் கூறி​னார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *