நிதியையும், அதன் பையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்ல; தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் பாதுகாத்து வருபவர் ஆசிரியர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

85 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நினைவூட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் 28.1.1940 (அப்பொழுது அவ்வூர் கழகத் தலைவர் வாடிப்பட்டி சுப்பையா) 1001 அணா தந்தை பெரியாரிடம் வழங்கப்பட்டது.

‘பெரியார் பண முடிப்பு 1001 அணா’ என்ற வாசகம் அடங்கிய சிவப்பு வண்ணத்தில் உள்ள அந்தப் பையையும் விரித்துக் காட்டினார்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற நிதியை மட்டுமல்ல; அந்த நிதி அடங்கிய பையையும் பாதுகாப்பாக வைத்திருந்த கழகத் தலைவரை முதலமைச்சர் வியந்து பாராட்டினார்.

‘நிதியையும், அதன் பையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்ல; தந்தை பெரியார்தம் கொள்கைகளையும் பாதுகாத்து வருபவர் ஆசிரியர்’ என்று முதலமைச்சர் முதல் அனைவரும் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *