பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் வரவேற்றார்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

‘பெரியார் உலகம்’ நிதி வழங்குவதற்காக பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  அன்போடு வரவேற்றார். இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் நிழற்படத்தின் பிரதியை மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அந்தப் படம் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வக அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தமிழர் தலைவர் முதலமைச்சருக்குக் காட்டினார்.  உடன்:  கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா. (சென்னை, 18.10.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *