பெரியார் கல்வி நிறுவன மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றுச் சாதனை

1 Min Read

தொட்டியம், அக். 15- தொட்டியம், சிறீசபரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கராத்தே & சிலம்பம் மகாகுரு, பி.எம்.சேகர் சிலம்பக் கலைக் கூடம் ஆகியவை இணைந்து நடத்திய, மாநில அளவிலான 3ஆம் ஆண்டு சிலம்பப் போட்டிகள், திருச்சி சிறீரங்கத்தில் கடந்த 05.10.2025ஆம் தேதியன்று நடைபெற்றது.

 

இப் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி. ஷிஃபா 10 வயதிற்கு உட்பட்டோருக்கான  பிரிவில் ஒற்றைக் கம்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவி பி.ஆர்.ஜனீஷாசிறீ  வேல்கம்புப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும் வென்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

மாணவிகளின் இந்த வெற்றிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *