பாஜகவின் ஆட்சிநடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

Viduthalai
1 Min Read

போபால், நவ. 26- பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் (பார்மர்) நவம்பர் 25 அன்று சமைப்பதற்கு தேவைப்படும் விறகிற்காக பேரீச்ச மரத்தின் கிளை களை வெட்டியுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹோர் சமூகத் தைச் சேர்ந்த ஜாதிவெறிக் குண்டர்கள் தாழ்த்தப் பட்ட மக்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட னர்.  குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் விறகு வெட்ட கொண்டு வந்திருந்த கோடரியை பிடுங்கி அவர்கள் மீதே தாக்கு தல் நடத்தியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மொரேனா மாவட்ட மருத்துவமனை யில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையம் வழக்குப்திவு செய்துள்ளது. ஆனால் யாரையும் கைது செய்ய வில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *