பாஜகவின் ஆட்சிநடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

1 Min Read

போபால், நவ. 26- பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் (பார்மர்) நவம்பர் 25 அன்று சமைப்பதற்கு தேவைப்படும் விறகிற்காக பேரீச்ச மரத்தின் கிளை களை வெட்டியுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹோர் சமூகத் தைச் சேர்ந்த ஜாதிவெறிக் குண்டர்கள் தாழ்த்தப் பட்ட மக்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட னர்.  குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் விறகு வெட்ட கொண்டு வந்திருந்த கோடரியை பிடுங்கி அவர்கள் மீதே தாக்கு தல் நடத்தியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மொரேனா மாவட்ட மருத்துவமனை யில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையம் வழக்குப்திவு செய்துள்ளது. ஆனால் யாரையும் கைது செய்ய வில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *