தி.இரா.இரத்தினசாமி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

1 Min Read

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களின் மறைவையொட்டி இன்று (14.10.2025) காலை 10:30 மணிக்கு சேலையூர் அன்னை இந்திரா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகக் கொடியினைப் போர்த்தியும், மலர் மாலை வைத்தும் மரியாதை செலுத்தி, மகன்கள் இராமசாமி, சிவசாமி, மகள்கள் முத்துமணி, தங்கமணி, திருமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ஞானசேகரன், பூவை.செல்வி, தாம்பரம் மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள் நாகவள்ளி, நூர்ஜஹான், தாம்பரம் குணசேகரன், சேத்துப்பட்டு நாகராஜன், அனகை ஆறுமுகம் மற்றும் தோழர்கள் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *