அநாகரிகமாகப் பேசி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை அக். 14-  அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு 12.10.2025 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றியபாஜக அரசு நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆர்டிஅய்-யில் ஒன்றியபாஜகஅரசு மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைபடுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். நாங்கள் மக்கள் பிரச்சினைகளில் எந்த சமரசம் செய்து கொள் ளாமல், கூட்டணியில் இருந்ததாலும் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறோம். கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது. நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது? எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *