நாமக்கல், அக்.14 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு வைத்ததாக வந்த இ-மெயிலைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அடையாளம் தெரியாத முகவரி மூலம் தீவிர சோதனை
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத முகவரி மூலம் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது, இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா உத்திரவின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் டயானா உதவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம், நீதிமன்றம், ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை
எனினும் இ-மெயிலில் குறிப்பிட்டது போல் வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அவை வெறும் புரளி எனவும் தெரியவந்தது.
எனினும், மேற்குறிப்பிட்ட பகுதியில் காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மேற்குறிப்பிட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.