திருச்சி, அக்.13- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு (D.Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் 07.10.2025 முதல் 09.10.2025 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் Emmchak formulations Pvt. Ltd., Apollo Pharmacy மற்றும் MedPlus Pharmacy உள்ளிட்ட மூன்று மருந்தியல் நிறுவனங்கள் நடத்தியது.
மாணவர்கள் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டி ருக்கும்போது நடைபெற்ற இந்நேர்முகத்தேர்வில் Apollo Pharmacy நிறுவனத்தால் 30 மாணவர்களும் MedPlus Pharmacy நிறுவனத்திடமிருந்து 25 மாணவர்களும் பணிநியமனம் பெற்றனர். மேலும் Emmchak நிறுவனத்தின் மூலம் 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் மேற்படிப்பை முடித்து பணியினை தொடர்வதாக தெரிவித்தார். மொத்தம் 59 பேர் கலந்து கொண்டதில் 59 பேரும் மருந்தியல் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்வு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலை மையில் 09.10.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி,பயிற்சி பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச. இராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள் சக்தி, ரெத்தினா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் 58 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. நேர்முகத் தேர்வு நடத்திய மருந்தியல் நிறுவனங்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மருந்தியல் சார்ந்த திறன்களை பெற்றிருப்பதுடன் பணியிடங்களில் அர்ப்பணிப்புணர்வுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவதாக தெரிவித்தனர்.
மாணவர்கள் மருத்துவமனையில் பல்வேறு பயிற்சி நிறைவு செய்தவுடன் ரூ.19,500/- மாத ஊதியத்தில் மருந்தாளுநராக பணி நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.