ரயில்வே தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வச் செயலியை பயன்படுத்த வேண்டும் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தல்

1 Min Read

சென்னை, அக்.13-ரயில் நிலையங்களில் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் மற்றும் ரயில்களின் வருகை உள்ளிட்ட பல தகவல்கள் தற்போது இணையதளம் வாயிலாகவே பெரும் பாலான பயணிகள் தெரிந்து கொள்கின்றனர்.

அதன்படி, இணையத ளத்தில் ரயில்வே செயலி கள் மற்றும் தனியார் செயலிகள் மூலமும் ரயில்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின் றன. அதில், தனியார் செயலிகளில் ரயில்களின் புறப்பாடு, நடைமேடைகள் விவரம் உள்ளிட்டவை முன்னதாகவே அறியும் வகையில் உள்ளது. தனியார் செயலிகள் மூலம் வழங்கப்படும் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங் களில் பயணிகளை ஏமாற்ற மடைய செய்வ தாகவும், அதனால் ரயில்களை தவறவிட்டும், அவசரமாக ரயில் நடைமேடைகள் கண்டுபிடித்து ரயிலில் ஏற முயற்சி செய்யும் நிலையும் நிகழ்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுபோல நாள்தோறும் ஏராளமான பயணிகள் தனியார் செயலிகளின் தவறான தகவல்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின் றனர்.

இதுகுறித்து சென்டிரல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியபோது, “ரயில்வே துறையால் ‘இந்தியன் ரயில்வே என்கொயரி’ ‘நேசனல் ரயில்வே என்கொயரி’ போன்ற சில செயலிகள் மூலமே ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அவை நம்பகமான தகவல்களாகும்.

ஆனால், பல தனியார் செயலிககளில் பொதுவாக யூக அடிப்படையில் தகவல்களை வெளியிடு கின்றன. எனவே, ரயில்  பயணிகள் எச்சரி க்கையுடன் செயல்படுவது அவசியம். ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலிகளில் மட்டுமே தகவல் பெற பயன்படுத்த வேண்டும்’ என்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *