சென்னை, அக்.13-ரயில் நிலையங்களில் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் மற்றும் ரயில்களின் வருகை உள்ளிட்ட பல தகவல்கள் தற்போது இணையதளம் வாயிலாகவே பெரும் பாலான பயணிகள் தெரிந்து கொள்கின்றனர்.
அதன்படி, இணையத ளத்தில் ரயில்வே செயலி கள் மற்றும் தனியார் செயலிகள் மூலமும் ரயில்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின் றன. அதில், தனியார் செயலிகளில் ரயில்களின் புறப்பாடு, நடைமேடைகள் விவரம் உள்ளிட்டவை முன்னதாகவே அறியும் வகையில் உள்ளது. தனியார் செயலிகள் மூலம் வழங்கப்படும் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங் களில் பயணிகளை ஏமாற்ற மடைய செய்வ தாகவும், அதனால் ரயில்களை தவறவிட்டும், அவசரமாக ரயில் நடைமேடைகள் கண்டுபிடித்து ரயிலில் ஏற முயற்சி செய்யும் நிலையும் நிகழ்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுபோல நாள்தோறும் ஏராளமான பயணிகள் தனியார் செயலிகளின் தவறான தகவல்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின் றனர்.
இதுகுறித்து சென்டிரல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியபோது, “ரயில்வே துறையால் ‘இந்தியன் ரயில்வே என்கொயரி’ ‘நேசனல் ரயில்வே என்கொயரி’ போன்ற சில செயலிகள் மூலமே ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அவை நம்பகமான தகவல்களாகும்.
ஆனால், பல தனியார் செயலிககளில் பொதுவாக யூக அடிப்படையில் தகவல்களை வெளியிடு கின்றன. எனவே, ரயில் பயணிகள் எச்சரி க்கையுடன் செயல்படுவது அவசியம். ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலிகளில் மட்டுமே தகவல் பெற பயன்படுத்த வேண்டும்’ என்றார்கள்.