டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 3ஆவது நாளாக நீடிப்பு தினமும் ரூ.2 கோடி வருவாய் இழப்பு

சென்னை, அக்.12- சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 2025-2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 9.10.2025 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின் றனர். இவர்களின் போரா ட்டம் 11.10.2025 அன்று 3ஆவது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்மண் டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:-

எங்களது போராட்டம் காரணமாக தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் கியாஸ் வீதம், 2 நாட்களில் 30 ஆயிரம் டன் கியாஸ் பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்வது தடைப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்பாக தென்னிந்திய அளவில் நாமக்கல் நகரை மய்யமாக கொண்டு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் நகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங் களை பட்டறை களில் நிறுத்தி சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற  னர்.

இந்த போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2 கோடி வீதம் சுமார் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாண்டில் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கியாஸ் டேங்கர் லாரிகளின் போராட்டம் நேற்று (11.10.2025)  3-வது நாளாக தொடர்வதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை உருவாகி விடும்.

இதனால் தமிழ் நாடு உள்பட தென் மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிலிண் டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *