விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாட்டியாலா, அக்.12 நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் 10.10.2025 அன்று உத்தரவிட்டது.

பஞ்சாப் மாநிலம் பாட்டி யாலாவைச் சோ்ந்த சுனிதா சா்மா என்பவா் தாக்கல் செய்த பொது நல மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு 10.10.2025 அன்று விசாரணை நடத்தியது.

அந்த மனுவில் கூறப்பட்டி ருப்பதாவது: ஊழல் மற்றும் தோ்தல் தொடா்புடைய குற்றங்களில் சிறையில் அடைக்கப் பட்டவா்களைத் தவிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடா்பாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகள் மற்றும் குற்றம்உறுதிசெய்யப்படாத கைதிகள் வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951 பிரிவு 62 (5) தடை விதிக்கிறது.

இந்தச் சட்டம் பேரவை உறுப்பினா்களின் வாக்குரிமை மற்றும் தகுதிநீக்கம் பற்றியே குறிப்பிடுகிறது. இதில் தகுதி வாய்ந்த குடிமக்களின் வாக் குரிமையை பறிக்க முடியாது.

சிறைகளில் உள்ள 75 சதவீத கைதிகள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனா். அவா்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுவதுமாக நிறைவ டையும் முன் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. விசாரணைக் கைதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் முன் அவா்களது வாக்குரிமையை பறிப்பது ஜனநாயகமற்ற செயல்.

குறிப்பிட்ட சில குற்றங்களில் ஈடுபட்டோருக்கு மட்டுமே உலகளவில் வாக்குரிமை மறுக்கப் படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு பாகுபாடின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கும் பன்னாட்டு ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

குடியுரிமை அல்லாதோர், குற்றம் அல்லது ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் போன்றவா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

கடந்த 2016-இல் ‘எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது’ என தோ்தல் ஆணையம் விழிப்புணா்வு பிரசாரம் மேற் கொண்டது. அதேபோல் ‘உலகம் எவ்வாறு வாக்களிக்கிறது: ஜனநாயகங்களில் பின்பற்றப்படும் வாக்களிப்பு முறைகளின் தொகுப்பு’ என்ற ஆவணத்தையும் வெளியிட்டது.

எனவே, சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து ஒன்றிய அரசும் தோ்தல் ஆணையமும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை கவனத்தில்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு இதுதொடா்பாக ஒன்றிய அரசும் தோ்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *