ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் பாரீர்! குழந்தை பருவத்திலிருந்தே பாலியல் தொல்லை இளைஞர் தற்கொலை

1 Min Read

கோட்டயம், அக்.12 ஆர்எஸ்எஸ் மய்யத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தை பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதால் அவர் மனநலன் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.

கேரளத்தின் கோட்டயம் அருகேயுள்ள கஞ்சிரப் பள்ளியை சேர்ந்த 26 வயதான அனந்து அஜியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு சுற்றுலா விடுதியில் கடந்த 9.10.2025 அன்று மீட்கப்பட்டது.

அனந்துவின் உடலைக் கைப்பற்றி, முதல் தகவல் அறிக்கை பதிந்து வழக்கை விசாரிக்கும் கேரள காவல்துறையினர்  தடயவியல் துறை உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் கிடைத்துள்ளன.

இன்ஸ்டாவில் அனந்து பகிர்ந்துள்ள தகவல்கள்

அனந்துவின் தற்கொலைக் குறிப்பு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஆர்எஸ்எஸ் முகாம்களில் தனக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் முகாம்கள் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றபோது தானும் அவற்றில் பங்கேற்றதாகவும், தனக்கு மிக நெருக்கமான அண்டை வீட்டிலுள்ள ஒரு சகோதரர் தன்னுடன் பங்கேற்ற அந்த முகாம்களில் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக அனந்து குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலரால் தான் 4 வயதிலிருந்தே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தன்னைப் போன்றே, குழந்தைகள் பலரும் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு’ அனந்து பெற்றோர்களை எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ஓசிடி எனப்படும் மனநலப் பிரச்சினையால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் வி. கே. சநோஜ் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனிதத்தன்மையற்ற முகம் இச்சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டிகிறது. அங்குள்ள கிரிமினல் சக்திகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *