கண்ணை உறுத்துகிறதாம் ஹிஜாப் ஆடை ஒட்டு மொத்த தனியார் பள்ளிகளிலும் ஒரே சீருடை – சிறுபான்மையினருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு

1 Min Read

ஜெய்ப்பூர், அக்.12 ராஜஸ்தானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 50,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘ஒரே சீருடை’ என்ற நடைமுறையைக் கொண்டு வர ராஜஸ்தான் அரசு தீவிரமாக உள்ளது.

ஏற்ெகனவே, 80,000-க்கும் மேற் பட்ட அரசுப் பள்ளிகளில் இஸ் லாமிய மாணவிகள் தலையை மறைக்க அணியும் ஹிஜாப் ஆடைக்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தற்போது, ஒரே சீருடை என்ற பெயரில் பெரும்பாலான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தனியார் பள்ளிகளிலும் ஹிஜாப் அணிவதைத் தடுக்கும் நோக்குடன் அரசு களமிறங்கியுள்ளது.

இது தொடர்பாக, அரசின் மறைமுக மிரட்டல்களை எதிர்த்துப் பல தனியார் பள்ளிகள் நீதிமன்றம் சென்றன. முதலில் தனியார் பள்ளிகளின் சீருடை விதிகளில் அரசு தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மாநில அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே சீருடை என்ற நடைமுறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. தனியார் பள்ளிகள் தங்கள் தன்னாட்சியில் அரசு தலையிடுவதாகக் கூறி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஏற்ெகனவே, கருநாடகாவில் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஹிஜாப்பிற்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது, ராஜஸ்தான் மாநில பாஜக அரசும் இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஆடை மீது கண் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சீருடை மற்றும் மத அடையாளங்களில் கவனம் செலுத்துவதாக விமர் சனங்கள் எழுந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *