மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கிடைக்க விருந்தோம்பல் பயிற்சி அளிக்க ஒப்பந்தம்

1 Min Read

 சென்னை, மே 21 –   சென்னையில் உணவகங்களை நடத்தி  வரும் ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நிறுவனம் விருந் தோம்பல் துறையில்  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க  மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஒட்டல் மேலாண்மை பயிற்சிப் பள்ளியுடன்  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  

மணிப்பால் நிகர்நிலை பல்கலைக்கழகம் அய்.டி.சி. ஓட்டல்களின் ஒரு பிரிவான வெல்கம் குரூப் உடன் இணைந்து இந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது.  சென்னை வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டுள்ள கீதம்  உணவகத்தைப் பொறுத்த வரையில், இந்த ஒப்பந்தமானது, தமது உணவுப் பட்டியலில், புதுமையான உணவு வகைகளை அறிமுகப் படுத்தவும், பயிற்சி, கூட்டு-ஆராய்ச்சிக்கும் உதவும் என கருதுகிறது.  ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் 150 பேர் கொண்ட சமையல் நிபுணர் குழுவிற்கு பணி சார்ந்த மேம்பாட்டிற்கும், தொழில் நுணுக்கத்தை எளிதாக்கு வதற்கும் உதவும்  என்றும் அந்நிறுவனம்  கருதுகிறது.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில்  ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர்  நாராயண ராவ் முரளி  மற்றும் டபிள்யூ. ஜி.எஸ்.எச்.ஏ.-வின் முதல்வர் டாக்டர் செஃப் கே. திருஞானசம்பந்தம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *