ராமேசுவரம், அக்.11- இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 30 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன் பிடித் துறைமு கத்திலிருந்து கடலுக்குச் சென்ற 4 விசைப்படகுகளுடன் மீனவர்களான அரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
இம்மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய் யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அக்டோபர் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்
ளனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவப் பிரதிநிதி சேசுராஜ் தலைமையில் நேற்று (10.10.2025) நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மீனவர் களைச் சிறைப் பிடித்ததைக் கண்டித்தும், அவர்களைத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இன்று (11.10.2025) ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும், காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
Leave a Comment