கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.10.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

* உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட ரேவந்த் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘தலைமை நீதிபதி தாழ்த்தப்பட்ட வகுபபைச் சேர்ந்தவர் என்பதால் தாக்கினார், இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதல் நடந்ததில்லை’: வழக்குரைஞர் கிஷோர் மீது பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அதாவாலே. கோரிக்கை.

* அரசாங்கங்கள் உயர் கல்விக்கு போதுமான அளவு செலவிடவில்லை: ஏ.அய்.சி.டி.இ. தலைவர் சீத்தாராம் குறிப்பிட்டுள்ளார்.

தி இந்து:

* ’ஹால்’ மலையாளத் திரைப்படத்தில் இருந்து மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவது மற்றும் பல காட்சிகளை நீக்க ஒன்றிய அரசின் சென்சார் போர்டு நிர்ப்பந்தம்.

* பீகாரில் தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்: தேஜஸ்வி அறிவிப்பு

தி டெலிகிராப்:

* பீகாரின் வாக்காளர் திருத்தம்: தேர்தலுக்கு முன் விலக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *