மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல்முறையாக பேசிய தலைமை நீதிபதி

புதுடில்லி, அக்.10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், 6.10.2025 அன்று காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்” என்று கூறி கவாய் ஸநாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.

இதற்கிடையே வழக்குரைஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “வழக்குரைஞர் ஒருவர் தன் மீது காலணி வீசிய சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். ஆனால், அது ஒரு மறக்க வேண்டிய கடந்தகால நிகழ்வாகவே பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இப்படியும் ஓர் அரசா?

423.6 கோடியை
புதுவை அரசு பயன்படுத்தவில்லை

ஒன்றிய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை, அக்.10 புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று ஒன்றிய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

புதுவை சட்டப்பேரவையில் இந்தத் தணிக்கை அறிக்கை 9.10.2025 தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒன்றிய தணிக்கை கணக்குக் குழுவின் தமிழ்நாடு- புதுவைக்கான தலைமை கணக்கு ஜெனரல் ஆா். திருப்பதி வெங்கடசாமி, புதுவைக்கான முதுநிலை துணை கணக்கு ஜெனரல் பி. சுகேந்திரன் ஆகியோா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒன்றிய அரசின் பங்கு ரூ.298.22 கோடி மற்றும் மாநில பங்கான ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ. 534.16 கோடி புதுவை அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்குக்கு 31.3.2024 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.423.61 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

இதே போன்று 2024 மாா்ச் வரை புதுவை அரசுத் துறைகளில் முறைகேடு, பணம் இழப்பு மற்றும் கையாடல் உள்ளிட்ட 316 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அரசின் எல்லா துறைகளையும் சோ்த்து மொத்தம் ரூ.28.89 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் புதுவை மின்துறையில் மட்டும் 257 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அரசுக்கு இந்தத் துறையில் மட்டும் இழப்பு ரூ.27.14 கோடி. வழக்கமாக ஒன்றிய தணிக்கை குழு அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு சட்டப்பேரவை பொதுகணக்குக் குழு கூடி இப் பிரச்னை குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கும் என்றனா்.

பேட்டியின்போது, முதுநிலை கணக்கு அதிகாரிகள் பாத்திமா ரோஸலின் நான்சி, விஸ்வநாதன், உதவி கணக்கு அதிகாரி தீபக் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *