அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை, அக். 9-  அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று முன்தினம் (7.10.2025) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒவ்​வொரு நாளும் மருத்​து​வம், உயர்​கல்வி அவற்​றின் மேம்​பாட்​டுக்​காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார்.

உயர் கல்​வி​யில் தமிழ்நாட்டு மாணவர்​கள் என்​றென்​றும் உயர்ந்த நிலை​யில் திகழ வேண்​டும் என்​ப​தற்​காக​வும், தொழில்​நுட்​பத் துறையில் உலக நாடு​களுக்​கிடையே உள்ள போட்​டி​யில் சிறந்து விளங்க வேண்​டும் என்ற எண்​ணத்​தி​லும், வேலை தேடு​பவ​ராக இல்லாமல் தொழில்​முனை​வோ​ராக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக​வும் ‘நான் முதல்​வன்’ என்ற திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. மாணவ-​மாணவி​கள் உயர்​கல்வி பெற பொருளா​தா​ரம் ஒரு தடை​யாக இருக்​கக் கூடாது என்​ப​தற்​காக​வும் சுய மரி​யாதை​யுடன் உயர்​கல்வி பயில​வும் ‘புது​மைப் பெண்’. ‘தமிழ்ப் புதல்​வன்’ போன்ற திட்​டங்​கள் மூலம் மாதந்​தோறும் ரூ.1000 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 37 புதிய அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. நடப்பு கல்​வி​யாண்​டில் மட்​டும் 16 புதிய கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கூடு​தல் மாணவர் சேர்க்கை இடங்​களுக்​கும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. நவீன தொழில்​நுட்​பத்​துக்கு ஏற்ப அந்​தந்த பகு​தி​யில் உள்ள தொழில்​முறைக்கு ஏற்ற பல்​வேறு புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மாணவர்​களின் கல்வி கற்​கும் திறன் எந்த வகை​யிலும் பாதிப்​படையக் கூடாது என்ற எண்​ணத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களை நிரந்​தர​மாக நிரப்ப முதலமைச்சர் ஆணை​யிட்​டுள்​ளார். இந்த உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் விரை​வில் நிரப்​பப்​படும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *