கருநாடகாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

1 Min Read

பெங்களூரு, அக்.9- கருநாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளுக் கான காலக்கெடு நீட் டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணி யில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோ பர் 18ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு வில் கூறியதாவது: கரு நாடகாவில் சமூக,கல்வி, பொருளாதார கணக்கெ டுப்புப் பணிகள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடைய வில்லை.

கொப்பல் மாவட் டத்தில் 97 சதவீதமும், உடுப்பி 63 சதவீதமும், தட்சிண கன்னட மாவட் டத்தில் 60 சதவீதமும் மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து மாவட்டங் களிலும் 100 சதவீதம் கணக்கெடுப்பு முடிக்கும் வகையில் அக்டோபர் 17ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப் புப் பணியில் 1.2 லட்சம் ஆசிரியர்கள், 40 ஆயிரம் இதரப் பணியாளர்கள் என ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் ஆசிரி யர்கள் முழுமையாக ஈடு படும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 18ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த கணக்கெடுப்புப் பணி யிலிருந்து விலக்கு அளிக் கப்படும்.

கணக்கெடுப்புப் பணி யின் போது உயிரிழந்த 3 ஊழியர்களின் குடும் பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த பணியில் பங்கேற்காத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல மைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *