நாட்டின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

1 Min Read

புதுடில்லி, அக்.8 2021 -2023 கணக்கெடுப்பின்படி நாட்டின் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் என இருப்பதாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆராதனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

கருத்தரிக்கும்போது உரு வாகும் கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தை வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் முன்பை விட அதிகரித்துள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார்.

முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முன்பு கருவின் நோய் கண்டறிதல் நுட்பங்களை வலுப்படுத்தும் தேசிய உணர்திறன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய தாவது,

”பாலின பிறப்பு விகிதத்தில் நேர்மறையான இலக்கை நாடு எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரிப் பதிவு முறைப்படி, பாலின விகிதம் 18 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது, 2016-2018 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 819 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021-2023 ஆண்டில் 917 பெண்களாக அதிகரித்துள்ளது.

2021-2023 கணக்கெடுப் பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் உள்ளனர். கருவின் பாலினத்தை முன் கூட்டியே அறிய தடை விதிக்கும் சட்டத்தை வலுப் படுத்தியதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகி யுள்ளது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பிறப்பானது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் அதிக மீள்தன்மையுடையதாகவும் உள்ளது. அதாவது, இயற் கையாகவே ஆண் குழந்தை களைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உயிர்வாழ்தல் அதிக சாத்தியத்தைக் கொண் டது.

ஒரு சமூகமோ அல்லது தனி நபரோ ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, எந்த பாலினக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அல்ல” எனக் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *