பெருந்தன்மை பலவீனமாகாது! ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!

ரயா புஜுர்க், அக். 8- உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட மசூதியை புல்டோஸர் மூலம் முஸ்லிம்களே இடித்து அப்புறப்படுத்தினர்.
அஸ்மோலி காவல் நிலைய எல்லைக் குள்பட்ட ரயா புஜுர்க் கிராமத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருந்தது. அக்கட்டடம் சட்டவிரோதமானது என்பதால், அதை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அண்மையில் அறிவிப்பு அனுப்பியது.
அதேநேரம், மசூதி கட்டடத்தை தாங்களே இடித்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்த மசூதி கமிட்டி, நான்கு நாள் கால அவகாசம் கோரியது.
பின்னர் கால அவகாசம் வழங்கப்பட்டு, மசூதியை இடிக்கும் பணி கமிட்டி சார்பில் தொடங்கப்பட்டது. முதலில் சுத்தியல், கடப்பாறைகள் கொண்டு கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பணி நிறைவடைய தாமதம் ஆனதால், நான்கு நாள் கால அவகாசத்தின் கடைசி நாளான 5.10.2025 அன்று புல்டோஸர் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
குறித்த கால அவகாசத்துக்குக்குள் மசூதியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், புல்டோஸர் மூலம் பணியை மேற்கொண்டதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர். முன்னதாக, இதே பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திருமண மண்டபம் காவல் துறையினர் முன்னிலையில் கடந்த அக்.2-ஆம் தேதி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *