சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நடைபெற்ற திராவிடர் இன எழுச்சிப் பேரணி

2 Min Read

சென்னை, அக். 7- அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டில் திராவிட இன எழுச்சிப் பேரணி மாலை 5.00 மணியளவில் பாரதியார் சாலையில் எழுச்சியுடன் தொடங்கியது.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமை தாங்கினார்

திராவிடர் கழகம்

திருவள்ளூர் மா.மணி, வே.பாண்டு, எண்ணூர் வெ.மோகன், ஆவடி கார்வேந்தன், புழல் த ஆனந்தன், அரக்கோணம் சு.லோகநாதன், செங்கை பூ.சுந்தரம் மு.அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன். கொடியசைத்து தொடக்கி வைத்தார்

கலை நிகழ்ச்சிகள் வீர விளையாட்டுகளை பகுத்தறிவு கலைத்துறை மாநில தலைவர் கலைமாமணி மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இன எழுச்சிப் பேரணியை பார்வையிட்டு மகிழ்ந்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்

திரும்பும் இடமெல்லாம் கருங்கடல் போல் காட்சி அளித்தது, கழகத் தோழர்களின் அணிவகுப்பு, பெரியார் பிஞ்சுகள், மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தந்தை பெரியார் சமூக காப்பு அணியென தோழர்கள் கையில் கழக இலட்சியக் கொடி ஏந்தி பெரியார் படத்துடன் மாநில உரிமைகளை மீட்டெடுத்திடும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பினர்.

சடையார் கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்டம், மற்றும் பறை இசை, வீர விளையாட்டுக்கள். பெரியார் பிஞ்சு முதல் தொண்டர்கள் வரை பட்டாளம் என தொண்டு செய்து பழுத்த பழங்களாகிய பெரியாரின் பெருந் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து வந்தனர். மின்னலாய் கழகக் கொள்கை முழக்கங்கள் விண்ணை முட்டின மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் அறிவியல் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் சிலம்பம், நாக்கில் சூடம் ஏந்தி சாமியார்களின் பித்தாலாட்டம் ஒழிக என மோசடிகளை தோலுரித்து காட்டும் வகையிலும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எல்லாம் இணைந்த கட்டுப்பாடான அணிவகுப்பு கண் கவர வைத்தது, பார்த்தவர்கள் நெஞ்சங்கள் நிறைந்தது.

ஊர்வலம். பாவேந்தர் சாலை சந்திப்பு வழியாக எம்.ஜி.ஆர் சாலையை கடந்து ஆர்ச் சர்வீஸ் ரோடு மறைமலை நகராட்சி பக்கம் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தது.

 

 

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *