திடலின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு!

1 Min Read

சென்னை, அக். 6–  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை யொட்டி வலைதளப் பதிவிட்ட முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்!’’ என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு:

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும்என்றால், அதுதான் சுயமரியாதை!

அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும்பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே… உங்கள் பணிகளை நாங்களும்பகிர்ந்து கொள்கிறோம்!

திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணி யாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்!

இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *