புதுடெல்லி, அக்.6- கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
கலைஞர் பல்கலைக்கழகம்
மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞர் பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற அனைத்து கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சட்டமன்றத் தில் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டப் பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தாக்கல் செய்தார்.
வேந்தராக மாநில முதலமைச்சர்
இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதலமைச்சர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார்.
வேந்தரின் முன் அனுமதி யின்றி கவுரவ பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்.
குழுவால் தேர்வு செய்ய ப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமி ப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.
விரைவில் விசாரணை
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற் கண்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் அனுப்பி வைத்
தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இவ்வாறு அனுப்பி வைத்ததை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் மிஷா ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1ஆம் தேதி ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.