ஜப்பானில் முதல் பெண் பிரதமர்

2 Min Read

டோக்கியோ, அக். 6- ஜப்பான் ஆளுங்கட்சிதேர் தலில் வெற்றி பெற்ற சனே தகைச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஆளுங்கட்சி தோல்வி

ஜப்பானில் கடந்த 70 ஆண்டுகளா கலிபரல் டெமாக்ரடிக் கட்சியே ஆளுங்கட்சியாக உள்ளது. ஆனால் சமீப கால மாக இந்த கட்சியின் செல் வாக்கு குறைந்து வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவையிலும் தனிப் பெரும்பான்மையை இழந்தது.

பிரதமர் பதவி விலகல்

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தால் பிரதமர் ஷிகெரு இஷிபா பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

அந்த நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சிதலைவரே பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். எனவே ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பதவி தேர்தல் நடைபெற்றது.

ஆளுங்கட்சி தலைவராக தேர்வு

இதில் மேனாள் நிதி அமைச்சர் சனே தகைச்சி (வயது 64), வேளாண் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி உள்பட 5 பேர் போட்டியிட்டனர். முதல்கட்ட வாக்குப்பதி வில் சனே தசைச்சி, ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு தேர்வாகினர். மற்ற 3 பேரும் போட்டியில் இருந்து வெளியேறினர்.

இதனையடுத்து நடை பெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலிலும் சனே தகைச்சி அதிக வாக்குகளை பெற்றார். இதனால் ஆளுங்கட்சி தலைவராக அவர் அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்க உள்ளார். அவருக்கு கட்சி யின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லிபரல் அதேசமயம் டெமாக்ரடிக் கட்சி நாடாளுமன்றத்தில் போதுமான பலத்தை கொண்டிருக்கவில்லை. எனவே பெரும்பான் மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி உள்ளது. எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சனே தகைச்சி வெற்றி பெறுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *