புதுடில்லி, நவ. 10- அனைத்து மாநிலங்களுக்கும், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாடு அர சுக்கு ரூ. 2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சத்தை யும், அதிகபட்சமாக உத் தரப் பிரதேச மாநிலத் திற்கு 13 ஆயிரத்து 088 கோடியே 51 லட்சத்தை யும் ஒன்றிய அரசு விடு வித்துள்ளது.
விழாக் காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதி யானது அனைத்து மாநிலங்களுக்கும் விடு விக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த வரிப் பகிர்வு தமிழ்நாடு அரசுக் கான வஞ்சனையாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜக செல் வாக்காக இருக்கும் பீகா ருக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாயையும், மத் தியப் பிரதேசத்திற்கு 5 ஆயிரத்து 727 கோடி ரூபாயையும் விடுவித்துள் ளது.
இதுதொடர்பாக டிவிட்டர் எக்ஸ் பக்கத் தில் கருத்துப் பதிவிட்டி ருக்கும் மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் “மாநிலங்களுக்கான வரி பங்கீட்டில் 5 தென்னிந் திய மாநிலங் களுக்கும் சேர்த்து 11,527.86 கோடி விடுவித்துள்ள ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேசத் திற்கு மட்டும் 13,088.51 கோடி விடுவித்துள்ளது ஏன்? இந்த விகிதாச்சார வேறுபாட்டுக்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக் குமா?” என கேள்வி எழுப் பியுள்ளார்.