அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சியா?: 47 பேர் கைது

1 Min Read

அய்யப்பன்தாங்கல், அக். 3-  ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று  (2.10.2025) காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.

உரிய அனுமதியின்றி இந்நிகழ்ச்சிகள் நடப்பதாக எஸ்.ஆர்.எம்.சி. (போரூர்) காவல்துறையினருக்கு, பொதுமக்கள் மூலம் புகார் சென்றது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் உரிய அனுமதியின்றி அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது தெரியவந்தது.

இதனால், உரிய அனுமதியின்றி பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என 47 பேரைக் கைது செய்து சமுதாய நலக் கூடத்தில் அடைத்துவைத்து, மாலையில் விடுவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *