மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்

1 Min Read

செங்கை-மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில்   பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும் பொன் ஒருங்கிணைப்பில் தாம்பரம் குணசேகரன், த.மரகதமணி, அரும்பாக்கம் தாமோதரன், ராமச்சந் திரன், ஆவடி ரவீந்திரன், நம்பியூர் ப.வெற்றிவேல் ஆகியோர்   நேற்று (2.10.2025) வர்த்தகர்களையும், பொது மக்களையும் சந்தித்து வசூலாக 8,792 ரூபாயை திரட்டினர்.

திராவிடர் கழகம்

காந்தியார் சிலைக்கு
காவிகள் காவித் துண்டு

மொத்தம் 10 நாள்கள் பலரை சந்தித்து, பல சூழ்நிலைகளிலும் பொது மக்களின் பல்வேறான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தும் நம் இயக்க மகளிரணி, மகளிர் பாசறையினர் கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் முத்தையன் வழிகாட்டுதலிலும் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் திட்டமிட்ட ஒருங்கிணைப்பிலும், கழகத் தோழர்கள் துணையுடனும்   திரட்டிய மொத்த தொகை (தாம்பரம் கழக மாவட்டம் ரூ.65,006, செங்கற்பட்டு மாவட்டம் 62,502) ரூ.1,27,508 ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *