லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு நீதி விசாரணைக்கு உத்தரவு

லே (லடாக்) அக்.3  செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன் முறைப் போராட்டம் மற்றும் அதில் நான்கு பேர் உயிரிழந்தது குறித்து நிர்வாகம் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

வன்முறை

லடாக் பகுதிக்கு மாநிலத் தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வலியுறுத்தி பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், செப்டம்பர் 24 அன்று ‘லே அபெக்ஸ் பாடி’யின் இளைஞர் அணி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட் டக்காரர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் வன் முறையாளர்களை விரட்டினர்.  இந்தக் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

 நீதி விசாரணைக்கான உத்தரவு

காவல்துறையினர் நடவடிக்கை யில் கொல்லப்பட்ட நான்கு பேரின் மரணம் குறித்து சமூக அமைப்புகள், லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு நுப்ராவின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் அய்ஏஎஸ் அதிகாரி முகுல் பெனிவால் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் நடத்துவதாக அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர்.  நான்கு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

நிகழ்வு தொடர்பான தகவல் அல்லது ஆதாரம் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 4 முதல் 18 வரை விசாரணை அதிகாரியிடம் தாமாக முன்வந்து சமர்ப்பிக்கலாம் என நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *