புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் குழப்பம்!

2 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 24 தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழைமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. கடந்த 2020ஆ-ம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட் டினார். கட்டுமானப் பணி முடி வடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது.  வருகிற  மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

குடியரசுத் தலைவர் திறக்க கோரிக்கை

 ஆனால், மக்கள் பணத்தில் கட் டப்பட்டது என்பதாலும், நாட் டின் முதல் குடிமகள் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. 

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி போன்றவர்கள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட் டனர். 28-ஆம் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க் கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத் தியது.  இதற்கிடையே, நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (23.5.2023) அழைப்பிதழ்கள் ஆன் லைனில் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ஆம் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும் என்றும், பிற்பகலில் திறப்பு விழா நடை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் கூறப்பட்டுள் ளது. அழைப்பிதழை பெற்றவுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர். கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் ஆலோ சனையில் ஈடுபட்டன. 

இன்று இறுதி முடிவு 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:- புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடி யரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப் படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க் கட்சிகள் கருதுகின்றன. முறைப் படியான அழைப்பிதழ் கிடைத்த பிறகு, இதுதொடர்பாக   இன்று (24.5.2023) இறுதி முடிவு எடுக்கப்படும். திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும். இவ் வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2 கட்சிகள் அறிவிப்பு முதல் நபர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக் கணிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *