ஈரோடு ப.சம்பத்குமார் பிறந்தநாள் விடுதலை சந்தா வழங்கல்

1 Min Read

ஈரோடு, அக். 2– பகுத்தறிவாளர் சுயமரி யாதை வீரர் பெரியார் நகர் சம்பத் குமார் அவர்களது 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார் .தோழர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கினார். “விடுதலை” சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.

கலந்து கொண்ட வர்கள் ஈரோடு த.சண்முகம் தலைமை செயற்குழு உறுப்பினர், இரா நற்குணன் மாவட்ட தலைவர் கோ.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கு. சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் கோ திருநாவுக் கரசு, பேராசிரியர் ப. காளிமுத்து, வீ. தேவராஜ் தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி தினகரன், மகேந்திரன், மா.பிரபு, எஸ் கண்ணன், வழக்குரைஞர் கண்ணம்மா, யுவராஜ், பி.என்.எம். பெரியசாமி, தி.மு.க. இளைய கோபால், செல்வம், பிரவீன்ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.

முன்னதாக பிறந்த நாள் விழா கேக் வெட்டப் பட்டது அவருக்கு தோழர்கள் அனைவரும் பயனாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *