இருமொழிக்கொள்கை வழி படித்த தமிழர்கள் உலகம் முழுதும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி

திருச்சி, அக்.2- திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மய்யத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 1 தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டிபழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். அதில்,பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறுகிறார்.

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ் எங்களது அடையாளம். ஆங்கிலம் எங்களுக்கான இணைப்பு மொழி. இரு மொழி கொள்கை மூலம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். இங்கு படித்தவர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி, தமிழ்நாடு திறன்வாய்ந்த மாநிலமாக இருக்க இரு மொழி கொள்கை தான் காரணம். அது ஒன்றிய அரசுக்கும் தெரியும். தெரிந்திருந்த போதும் வீண் வாதத்திற்காக நம் மீது ஏதாவது ஒன்றைத் திணிக்கிறார்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் முதல்முறையாக எனது தொகுதியில் இந்த மய்யம் துவங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் ஏற்படுத்தி க்கொடுக்கிறோம்.

படித்த மாணவர்கள் அறிவுசார் சொத்துரிமை மய்யத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *