பிஜேபி எதிர்ப்பு அணி – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி ஆகியோருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 24 –  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் (22.5.2023) டில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடா ளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட் டும் முயற்சியில் பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, அக்கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியை நிதிஷ் குமாரும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து, கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்ஸ்ள் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என நிதிஷ் குமார் கடந்த மாத இறுதியில் கூறியிருந்தார். இதில் எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் 21.5.2023 அன்று சந்தித்தார். அப்போது, டில்லி அரசு உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவ காரத்தில் ஒன்றிய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் முழு ஆதரவு அளிப்பதாக கெஜ்ரிவாலிடம் நிதிஷ் உறுதி அளித்தார்.

இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சி யின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியை நிதிஷ் குமார் டெல்லியில் நேற்று (22.5.2023) மீண்டும் சந்தித்துப் பேசினார்.

கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலார் கே.சி.வேணுகோபால் மற்றும் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் லலன் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, வரும் மக்க ளவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோ சனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாட்னா வில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத் தினர்.

கருநாடக முதலமைச்சராக சித்த ராமையா கடந்த 20ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், எதிர்க் கட்சிக ளின் ஒருங்கிணைப்பை பறைசாற்றும் வகையில், நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *