கரூர் துயர நிகழ்வு வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்குப் பதிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.30 கரூர் சம்பவத்தை மய்யப்படுத்தி வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது  செய்யப்பட்டன.

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகின்றன. இவ்வாறு, பொது வெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார் களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

3 பேர் கைது

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பா.ஜ.க. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர் சகாயம் (38) தவெக மாங்காடு உறுப்பினர் சிவநேசன் (36) அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரக்குமார் (32) ஆகிய 3 பேரை சென்னைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

1 Comment
  • வதந்தியையும் பொய் தகவலையும் பொது வெளியில் பரப்பி அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் யாராயிருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்வதும் அவர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்குவதும் அத்தியாவசியமான ஒன்று அவர்கள் இந்த சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *