தமிழ்நாட்டில் 4 நாள் மழை – வானிலை ஆய்வு மய்யம் தகவல்

1 Min Read

 சென்னை,மே25 – சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே 28ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்.

கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் கத்திரி வெயில் காலம் தற்போது நிலவுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்தது. குறிப்பாக, நடப்பாண்டின் கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை (108 டிகிரி) வேலூரில் கடந்த 15ஆம்தேதி பதிவானது. இதற்கு மறுநாள்(மே 16), சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதன்பிறகு, கோடைமழை காரணமாக, சில நகரங்களில் வெப்பநிலை சற்று குறைந்தது. இருப்பினும், பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 13 நகரங்களில் நேற்று (24.5.2023) வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.

திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, கடலூர், ஈரோடு, பாளையங் கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பதிவானது. நாகப்பட்டினத்தில் 99 டிகிரி பதிவானது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *