சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம்

0 Min Read

சென்னை,மே25- போக்குவரத்து விதிகளை மீறிய வர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில்  10 இடங்களில் அழைப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்த சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.

இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த 20ஆம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராத தொகையாக ரூ.60,36,000 வசூலிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் அழைப்பு மய்யங்கள் மூலம் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.12,99,08,600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *