தமிழ்நாடு அரசின் மாதம் 2000 ரூபாய் வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் பெற்றோரை இழந்த மாணவ – மாணவிகளை கண்டறிய கள ஆய்வு நெறிமுறைகள் வெளியீடு

2 Min Read

சென்னை, செப்.29- ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் பெற்றோர் இழந்த மாணவ-மாணவிகளை அடையாளம் காண கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வழி காட்டி நெறிமுறைகளை யும் அரசு வெளியிட்டிருக்கிறது.

‘அன்பு கரங்கள்’ திட்டம்

இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு. அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை ‘அன்பு கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரி பார்க்க தமிழ்நாடு அரசு கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோ ரால் மாவட்ட அளவில் கள ஆய்வு செய்யப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப் பட இருக்கிறது.

யாரை பரிந்துரைக்கக் கூடாது?

இந்த விவரங்கள் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் அடிப்படை யில் சம்பந்தப்பட்ட மாணவ – மாணவிகளுக்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் வங்கி கணக்குக்கு நேரடி பணபரிமாற்றம் உதவித் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் தன்னார்வலர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது.

அதில், மாணவ-மாணவிகளின் பாதுகாவலர்கள் வேறு திட்டங்களின் கீழ் பயன் அடைந்தாலும், உதவித் தொகை மாணவ- மாணவிகளின் கல்விக்காக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என தன்னார்வலர்கள் கருதும்பட்சத்தில் அதற்கான கார ணத்தை குறிப்பிட்டு பரிந்துரை செய்யப்படவேண்டும். குழந்தை பரா மரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி படிப்பவர்கள், மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் நிதி ஆதரவுத்தொகை பெறுபவர்கள், கொரோனாவின் கீழ் பராமரிப்பு நிதி பெறுபவர்கள், பி.எம். கேர்ஸ் திட்டத்தின்கீழ் பராமரிப்பு நிதிபெறுபவர்கள் ஆகியோரை அன்பு கரங்கள் திட்டத்தின்கீழ் பரிந்துரை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி

மேலும், கைப்பேசி செயலியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு எக்காரணத்தை கொண்டும் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. கள ஆய்வின்போது துறை யால் வழங்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை தவிர, வேறு சில குடும்பங்கள் இருந்தாலும் அவர்களின் விவரங்களை புதிய விண்ணப்பங் களாக கைப்பேசி செயலியில்  பதி வேற்றம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *