லக்னோ, செப். 29- உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மிலாது நபியை முன்னிட்டு, இம்மாத தொடக்கத் தில் ‘அய் லவ் முகமது’ என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக உ.பி. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை (எப் அய்ஆர்) பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக இந்து அமைப் பினர்’அய் லவ் மகாதேவ் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பேரணி 26.9.2025 அன்று நடைபெற்றது.
இந்தப் பேரணியில் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி யதால் வன்முறை ஏற்
பட்டது.
இந்தப் பேரணியில் வந்தவர் களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதில் ஏற் பட்ட மோதலில் 10 காவல்துறையினர் காயமடைந்தனர்.
இதுதொடர் பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்
ளனர்.
மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் 1,700 பேர் மீது வழக்குகளை காவல்துதுறையினர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் போரா ட்டங்களுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் மதத்தலைவரும், இத் தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகிர் ராசாவை காவல்துறையினர் கைது செய்தனர்.