பெரியார் பிறந்த நாள் விழா கனடாவில் ‘‘பெரியாருக்கான ஓட்டம்’’ (Run/Walk for Periyar)

மிஸ்ஸிசாகா, செப்.28 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (27.09.2025)  காலை, மிஸ்ஸிசாகா நகரின் எரிண்டேல் பூங்காவில் ‘பெரியாருக்கான ஓட்டம்’  “Run/Walk for Periyar” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து வந்திருந்த கோ. கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு & சமூக நீதி கண்காணிப்புக் குழு – தமிழ்நாடு அரசு) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு, பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் – கனடா சார்பாக “விடுதலை களஞ்சியம்” நூல் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

அதே போன்று கோ. கருணாநிதி  தாம் எழுதிய “THOUGHTS OF PERIYAR” நூலையும், மோ.அருண் ஆக்கத்தில் வந்துள்ள குழந்தைகளுக்கான ’பெரியார் தாத்தா’ காமிக் புத்தகத்தையும் வழங்கினார்.

உலகம்

இந்நிகழ்வுக்கு, தோழர்கள் குடும்பங்களுடன் (பெரியார் பிஞ்சுகள்) வந்து உறுதுணையாக இருந்தனர். அனைவரின் பங்களிப்பால் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறியது.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஆசிப் மற்றும் கனடா வாழ் தோழர்கள்  இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோ.கருணாநிதி அவர்களின் பதிவு:  கனடா – ‘Run/Walk for Periyar’, என் இளைய மகன் அறிவுடன் இணைந்து, பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம், கனடா அமைப்பின் “Run/Walk for Periyar” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி! இந்நிகழ்வு, பெரி யாரின் சிந்தனைகளை போற்றி யதுடன், அவரது விழைவுகளை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லும் எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தியது.

– கோ. கருணாநிதி, 28.9.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *